அங்கு அவர் கட்டிடத் தொழிலாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பக்கவாட்டு சுவர் சரிந்து சின்னசாமி மீது விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய சின்னசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னசாமியின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.