இதில் ஒரு மாணவன் தெலுங்கு தேர்வில் ராமாயணம் பற்றி எழுதுமாறு கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, உரிய பதிலல எழுதாமல், ‘எனது விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு, எனக்கு அதிகமாக மார்க் போட வேண்டும். இல்லாவிட்டால் எனது தாத்தாவிடம் கூறி மாந்திரிக பூஜை செய்து உங்களுக்கு சூனியம் வைத்துவிடுவேன்’ என எழுதி இருந்தான். இதை பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த விடைத்தாள் மேலதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த மாணவன் மற்ற விடைகளுக்கு அளித்த பதில் மூலம் 100க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் நேற்று முதல் ஆந்திராவில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.