இந்த நிலையில் மணிப்பூர் சென்ற அந்த எம்.பி.க்கள் குழு மற்றும் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூரில் தற்போது உள்ள நிலவரம் குறித்தும் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் குடியரசு தலைவரை சந்திக்க உள்ள நிலையில், நேற்று இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென குடியரசு தலைவர் முர்முவை நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மணிப்பூர் கலவரம் குறித்து அமித்ஷாவிடம் குடியரசு தலைவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.