முற்றும் மோதல்: “ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான்”..அதிமுக போஸ்டருக்கு பதிலடி கொடுத்த பாஜக..!!

மதுரை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்ததை அடுத்து இரு கட்சியினர் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான் என பாஜக தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டிய நிலையில் மதுரையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பேரறிஞர் அண்ணா பற்றிய அண்ணாமலையின் சர்ச்சை கருத்தால் அதிமுக – பாஜக இடையே நிலவி வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அறிவித்தார். இதனை வரவேற்று தூத்துக்குடியில் அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பாஜகவினரை கோபத்திற்கு ஆளாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டியில், “விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

“கூட்டணியாவது, கூந்தலாவது, நன்றி மீண்டும் வராதீர்கள்” என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகளுக்கு பதிலடியாக மதுரையில் திரைப்பட வசனத்தை குறிப்பிட்டு பாஜகளினர் கவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஒரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான் என பாஜக தனது போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம் :நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் கால் வைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா!!

ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைப்பதை எதிர்த்து வழக்கு..!!

மானூரில் மின் கசிவால் இசேவை மையம், ஓட்டல், பழக்கடையில் தீவிபத்து