சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நாளை பதவியேற்பு..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா தற்பொழுது மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு ஆளுநர் நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மும்பை ஐகோர்ட் நீதிபதி சஞ்சய் விஜயகுமாரை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம்கோர்ட் பரிந்துரைத்தது. உச்சநீதிமன்ற கொலீஜிய பரிந்துரையை ஏற்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமாரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா 24ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டி.ராஜா ஓய்வு பெற்றதால், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைந்திருந்தது.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும் மழை நீருக்கு எப்போது தீர்வு: பயணிகள் கேள்வி

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!