லாரி கவிழ்ந்ததால் 10 டன் தக்காளி ரோட்டில் சிதறியது

ஓமலூர்: பெங்களூருவில் இருந்து சுமார் 10 டன் தக்காளியை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று சேலம் மார்க்கெட்டிற்கு வந்தது. ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் வந்தபோது, லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால், நிலை தடுமாறிய லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த தக்காளி சாலையில் கொட்டியது. தகவலறிந்து வந்த ஓமலூர் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

லாரியை அப்புறப்படுத்தி, சேதமடைந்த தக்காளிகளை சாலை ஓரமாக தள்ளி விட்டனர். நல்ல நிலையில் இருந்த தக்காளியை மீட்டு மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் தக்காளி பழங்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். தற்போது விலை குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் தக்காளியை எடுக்காமல், வேடிக்கை மட்டும் பார்த்து சென்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு