10-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய விற்பனை வழக்குகள் இருக்கும் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கணவர் மது பழக்கத்திற்கு ஆளானதால் இரு பெண் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், குடும்பத்தை காக்க மது விற்பனையில் இறங்கியதும் தெரிந்து கொண்டார். இதையடுத்து நேர்மையான வழியில் அவர் வாழுவதற்கு உதவியாக சாப்பிட்டு கடை நடத்த தள்ளு வண்டியினையும், உணவகம் நடத்துவதற்கு ஒரே வாரத்திற்கு தேவையான அரசி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களையும் அவர் வழங்கி இருக்கிறார்.
சிட்டி சென்டர் பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு மக்களிடம் கையும், களவுமாக பிடிப்பட்ட 17 வயது சிறுவன் வாழ்வில் கல்வி என்ற தீபத்தை ஏற்றி இருக்கிறார் பாலமுருகன். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் உறவினர்கள் சிலரின் தவறான வழிகாட்டுதலால் செல்போன் திருட்டில் ஈடுபட முயற்சித்து சிக்கி கொண்டதை அறிந்த பாலமுருகன் அபிராமபுரம் செந்நாபுரி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிலையத்தில் ஐடிஐ படிப்பதற்கு உதவி இருக்கிறார். படித்து முடித்தால் வேலை வாங்கி தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.