போதை மாத்திரையுடன் கிருமி நாசினியை கலந்து குடித்த இருவரும் ஆற்றங்கரையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் கரையோரம் சடலங்களை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர். முதல் கட்ட தகவலில் கிருமி நாசினியில் இருவரும் போதை மாத்திரை கலந்து குடித்து தெரியவந்துள்ளது. இது குறித்து கும்பகோண நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.