கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் வரத்து குறைவு மற்றும் கனமழை பெய்து வருவதால் பூக்களை வாங்க சென்னை புறநகர் வியாபாரிகள், பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதன்காரணமாக பூக்கள் விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் , விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். நாளை புயல் உருவாகி உள்ளதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மார்க்கெட்டுக்கு சென்னை புறநகர் வியாபாரிகள் பூக்களை வாங்க வருவார்களா என்பது சந்தேகம்தான். இவ்வாறு கூறினார்.