மேலும் வெயிலின் தாக்கத்தால் கருகிப் போன தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்புவதற்கு கோடை மழை பெய்யுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான சீதோஷ்ண காலநிலை நிலவியது. மழையின் காரணமாக காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. மேலும் தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.