ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரண் பிரார்(23), கமல் பிரீத் சிங்(22), கரன் பிரீத் சிங்(28) ஆகிய 3 வாலிபர்களை கனடா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்நிலையில் ஹர்தீப் சிங் கொலையில் தொடர்புடைய பிராம்ப்டன் சர்ரேயை சேர்ந்த அமன்தீப் சிங்(22) என்பவரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கனடா போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹர்தீப் சிங்கை துப்பாக்கியால் சுட்ட 2 பேரில் ஒருவர் அமன்தீப் சிங். கைதான 4 பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.