மேற்கு தொடர்ச்சி மலையில் விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் இடங்களில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். கனிமங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல குத்தகைதாரர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் சட்டவிரோத குவாரி குறித்த விசாரணை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றப்படும் என்றும் எச்சரித்தனர்.