கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மதுராந்தகம்: கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன், டீன் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் யோகானந்த் அனைவரையும் வரவேற்றார். இதில், கல்லூரியின் முன்னாள் மாணவரும், செங்கல்பட்டு சரக காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரி நினைவுகளை பற்றி முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பேசினார்.

மேலும், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரியின் புதிய சங்க பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தங்களுடைய எதிர்கால திட்டங்களை மாணவர்கள் இடையே ஆலோசனை செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது. நிகழ்ச்சி இறுதியில் விளையாட்டுத்துறை இயக்குனர் திருமுரளி நன்றி கூறினார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்