ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன்; இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல்காந்தி என்னிடம் பேசினார்; கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என கூறினார். தொடர்ந்து கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, ‘நல்ல எண்ணம்தானே’ என்று பதிலளித்தார். வரும் மக்களவைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை. மக்களவை தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போதிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.