எல்லோருடைய கனவையும் நிறைவேற்றுகின்ற முதல்வர் இந்த எளியவனுடைய கனவையும் நிறைவேற்ற வேண்டும். கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் பிறந்த ஜூன் 3ம் தேதியை செம்மொழி தமிழ் தினமாக அறிவிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.25 லட்சம் என ஆரம்பித்து வைத்தவர் கலைஞர்தான். தற்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் தங்களுடைய தொகுதிகளுக்கு தைரியமாக செல்கிறார்கள் என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை 5 கோடி ரூபாயாக உயர்த்தி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.