இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் கடம்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் சீருடைகளை வழங்கினார். இதில், கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு கடம்பத்தூர் கைப்பந்து சங்கத்தின் சார்பில் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இறுதியில், தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் சட்ட ஆலோசகர் பிரகாஷ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை கடம்பத்தூர் கைப்பந்து சங்கத்தினர் செய்திருந்தனர்.