இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி உள்ளார். ஜோதி நிர்மலாசாமி கடந்த 2019 செப்டம்பர் 20ம் தேதி முதல் பத்திரப்பதிவு துறை செயலாளராக இருந்தார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பா.ஜோதி நிர்மலாசாமி மாநில தேர்தல் ஆணையாளராக அவர் பதவியேற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, இதில் எது முந்தையதோ அதுவரை பதவியில் நீடிப்பார்” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை அவர், மாநில தேர்தல் அலுவலகம் சென்று மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.