இத்தாலி ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் சாக்கரி

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி தகுதி பெற்றார். 2வது சுற்றில் செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவுடன் (37 வயது, 355வது ரேங்க்) நேற்று மோதிய சாக்கரி (27 வயது, 8வது ரேங்க்) 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சனோவா, ஜூலியா கிரேபர் (ஆஸ்திரியா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?