இதனால் பாதுகாப்பு காரணம் கருதி கட்டானியா நகரில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைகள் துகள்கள் படர்ந்துள்ளதால் பொதுமக்கள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இதே போன்று மத்திய மெக்சிகோவில் உள்ள போபோ கெட்பில் எரிமலை வெடிப்பு காரணமாக பியூபிலா நகரை அடர் சாம்பல் மூடியுள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.