கடந்த ஜனவரி மாதம் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க் ஐ நா, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதியும் இந்தியாவிற்கு உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில், எலன் மஸ்க் கருத்து பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் நேற்று கூறுகையில்,‘‘ 21ம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையிலும் ஐநா சபை உள்ளிட்ட ஐநா, அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்வதற்கும் நாங்கள் நிச்சயமாக ஆதரவு தெரிவிக்கிறோம்’’ என்றார்.