இந்தியா கூட்டணியின் அதன் ஓர் அங்கமாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வரும் டிசம்பர் 23ம் தேதி சனிக்கிழமையன்று திருச்சியில் வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. நாடாளுமன்ற சனநாயகப் பாதையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பயணிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவெய்துவதையொட்டி விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அரசியல் வெள்ளி விழாவாகவும் கட்சி தலைமையின் அகவை அறுபது மணி விழா நிறைவு விழாவாகவும் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.
இம்மாநாட்டில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கார்கே , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.