வாக்களித்தவர்கள் சதவீதம் குறைந்தது, ஆசிய சந்தைகளின் இறக்கம் ஆகியவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைப்பதாக அமைந்ததும், சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. இவை போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடனேயே சந்தையை அணுகி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி நிறுவன பங்குகள் விலை கடந்த 5 நாட்களில் 7 சதவீதம் -சரிவை சந்தித்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை கடந்த 5 நாட்களில் 6 சதவீதம் வரை சரிந்தன. இதனிடையே பாஜக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, பெரிய மாற்றம் ஏதுவுமின்றி, 83.51 ரூபாயாக உள்ளது.