காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கினார். மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்து கூறுகையில், ”காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டுறவு சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் உள்ளது.
இதன் நுழைவு வாயிலில் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் முடியும் வரை சுத்தமான குடிநீர் வழங்கப்படும்” என்றார். நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டுறவுத் துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.