ஆனால், தற்போது தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவர் ஷா மெகமூத் குரேஷி,தெருக்களில் இறங்கி தொண்டர்கள் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பெரிய அளவில் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் கடந்த முறை நடந்த வன்முறையில் பல தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கட்சியை விட்டே விலகி விட்டனர். இதனால் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரானை சந்திக்க வக்கீல்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.இதை கைது என்பதை விட கடத்தல் என்றே கூறலாம் என தெரிவித்துள்ளது.