இந்நிலையில், வடகிழக்கு டெல்லி தொகுதி எம்பி மனோஜ் திவாரி முன்னிலையில் மனிஷ் காஷ்யப் நேற்று பாஜவில் இணைந்தார். அப்போது மனோஜ் திவாரி,‘‘மனிஷ் காஷ்யப் மக்களின் பிரச்னைகளை எழுப்பினார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தார். எதிர்க்காலத்தில் அவரது திறமையின் அடிப்படையில் அவருக்கு பதவி அளிக்கப்படும்’’ என்றார். 80 லட்சம் பாலோயர்களை கொண்ட யூடியூர் மனிஷ் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை கடுமையாக விமர்சித்து வந்தார். வட கிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கன்னையா குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிரான பிரசாரத்தில் மனிஷ் காஷ்யப்பை ஈடுபடுத்த பாஜ முடிவு செய்துள்ளது.