இல்லம்தேடி கல்வித் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் பொது நூலக இயக்குநர் பதவியை அவர் கூடுதலாக ஏற்கனவே வகித்து வந்தார். தற்போதும் அவர் அந்த பதவியை கூடுதலாக கவனிப்பார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் பதவியை முழு கூடுதல் பொறுப்பாக கவனிக்கவும் ஆணையிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.