பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கந்தராஜ், கார்த்திக் ஆகியோர், பச்சையப்பனை கிரிக்கெட் மட்டையால் சரமாரி தாக்கினர். இதில் படுகாயமடைந்த பச்சையப்பன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து புழல் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், புழல் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக வட்ட செயலாளர் கந்தராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.