ஒரு இடத்தில் ஓபிஎஸ் வேனிலிருந்து இறங்கி நடந்து வாக்கு சேகரித்தார். அப்போது குதிரை ஓட்டி ஒருவர், தனது குதிரையை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வணக்கும் செலுத்த மண்டியிட சைகை காட்டினார். குதிரையும் முன்பக்க கால்களை மடக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ்… ‘ஏம்பா, வாய் இல்லாத ஜீவனை போய், இப்படி பண்ரேயப்பா… இது தப்பு’ என அன்பாக திட்டிவிட்டு குதிரையை வணங்கி விட்டு அங்கிருந்து விலகிச் சென்று வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.