சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: போரூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும் 18ம் தேதி காலை 11 மனியளவில் போரூரில் உள்ள செட்டியார் அகரம் ரோடு, துணை மின்நிலைய வளாகத்தில் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.