தமாகா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மணிவிழா: ஜி.கே.வாசன் நேரிலும் பாஜ தலைவர் அண்ணாமலை தொலைபேசியிலும் வாழ்த்து

சென்னை: சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு தனியார் விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மற்றும் அரிமா சங்க மாவட்ட இயக்குனர் ஜி.ஆர்.வெங்கடேஷின் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநில பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வழக்கறிஞர் ராஜம் எம்பிநாதன், விடியல் சேகர், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, ஜி.கே.எம் அரிமா சங்கத் தலைவர் சரவணன், மோகனசுந்தரம், ரகு, பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்று வாழ்த்து பங்கேற்றனர். இதில் தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை தொலைபேசியில் ஜி.ஆர்.வெங்கடேஷுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநங்கைகள், பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், இது தமாகாவின் இல்ல விழா. எனது கடினமான காலங்களில் துணைநின்றவர் ஜி.ஆர்.வெங்கடேஷ். மறைந்த ஜி.கே.மூப்பனார் பெயரில்தான் ஜி.கே.எம் அரிமா சங்கம் துவங்கப்பட்டது. தமாகா தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், எனக்கு துணையாக ஜி.ஆர்.வெங்கடேஷ் உண்மையான தொண்டனாக இருந்து வருகிறார். தமிழக மக்களுக்கு எதிர்கட்சிகள்மீது நம்பிக்கை வளர்ந்து, சிறந்து கொண்டிருக்கிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Related posts

ரிசல்ட் வருவதற்கு முன்பே தொண்டர்கள் மீது பழிபோட தயாராகும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்