இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச் சாராயம் உட் கொண்டு 22க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ₹50,000மும் அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் தவறு ஒன்றுமில்லை. அதே சமயத்தில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாகவும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதன் காரணமாகவும், கட்டடம் இடிந்து விழுவதன் காரணமாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹3 லட்சமும்.
சாலை விபத்துகள் , நீரில் மூழ்கி, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம் தான் அரசு நிவாரணமாக வழங்குகிறது. ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை. உயிர் என்பது விலை மதிப்பற்றது என்பதால், நிவாரண உதவி வழங்குவதிலே பாரபட்சம் காட்டுவது ஏற்புடையதல்ல. நிவாரண உதவியினை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.