ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.45 மணிக்கு பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.

மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் ஆளுநர், நாளை மாலை 4.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம் அவரது சொந்த பயணம் என்றும், வேறு சிறப்பான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Related posts

பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பு; ஜாமீன் மனு ஒத்திவைப்பு