அனைத்து தர மக்களுக்கும் பார்வையை அளிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்கி வரும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டினாலும், பத்திரிநாத் அவர்களின் வழிகாட்டுதலாலும் சேவையாற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. பத்திரிநாத் அவர்களின் சேவையை பாராட்டி மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருதுகளும் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது என்று பல்வேறு விருதுகளை பெற்றவர். இவ்விருதுகள் அவரின் கடின உழைப்பிற்கும், அர்பணிப்பு உணர்விற்கும், சேவை மனப்பான்மைக்கும் அளித்த அங்கிகாரம் ஆகும்.
ஜி.கே. மூப்பனார் அவர்களோடு நட்பு கலந்து அன்போடு பழகியவர். சிறந்த பண்பாளர். பத்திரிநாத் அவர்களின் இழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்களுது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சங்கர நேத்ராலயா மருத்துவமைனயின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஜி.கே.வாசன் பத்திரிநாத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.