இந்நிலையில் லெஜண்ட் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் சூரத்தில் நடந்தது. அதில் இந்தியா கேபிடல்ஸ் அணி 12ரன் வித்தியாசத்தில் குஜராத்தை ஜெயன்ட்சை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தின் போது கம்பீர்-சாந்த் இடையே வாக்குவாதம் நடந்தது. இந்நிலையில் கம்பீர் தன்னை கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும், முரட்டுதனமாக நடத்தியதாகவும் சாந்த் ஒரு வேதனை வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘கம்பீர் அடிக்கடி என்னை ஃபிக்சர்(சூதாட்டக்காரர்)…. ஃபிக்சர்’ என்று அழைத்தார். முதலில் நான் அதை கவனிக்கவில்லை. ஆனால் அதை அவர் நிறுத்தவேயில்லை.
கூடவே நீங்கள் ஒரு ‘எப்–கே ஆஃப் ஃபிக்சர்’ , என்று ஆங்கில கெட்ட வார்த்தையை சொல்லி திட்டினார். நடுவர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றும் அவர் அப்படிச் சொல்வதை நிறுத்தவில்லை. ஆனால் அவரை பார்த்து நான் எந்த ஒரு தரக்குறைவான அல்லது கெட்ட வார்த்தையை பயன்படுத்தவில்லை. ‘என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொண்டே கிண்டலாக சிரித்தேன். சொல்ல முடியாத விஷயங்களை அவர் பேசினார். அவரது தகுதிக்கு அப்படி பேசியதை ஏற்கமுடியாது. என் குடும்பம், என் மாநிலம் என எல்லோரும் எத்தனையோ கஷ்டங்களை சந்தித்துள்ளனர். எந்த காரணமும் இல்லாமல் என்னை வீழ்த்த நினைக்கிறார்கள். அவர் பேசிய அனைத்தையும் நிச்சயமாக உங்களுக்கு சொல்வேன்’’ என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சாந்த் மீது அவரது நண்பர்கள், கேரள போலீசில் பணமோசடி புகார் அளித்துள்ளனர்.