இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகளை பெற்று சென்றனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட சிகிச்சைக்கு ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை மருத்துவர்கள், பேரூர் திமுக நிர்வாகிகள், முன்னோடிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூர் திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.