போர்ட் ஹீயெனிமே, ஆக்நார்ட் மற்றும் சான்டா பார்பரா பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. .மேலும் சான் டியாகோவில் இருந்து மொஜாவே வரையிலான பகுதிகளுக்கு வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டது. அரிசோனாவின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் விடுமுறைகால ஷாப்பிங் செல்வதற்கு தயாரான நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது. இதனால் பலர் வீடுகளில் முடங்கினர்.