மேலும், ராமநாதபுரம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரம் செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை செயலாளர் கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.