இதில், அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் ஜெயபால் (48), ஆலை மேற்பார்வையாளர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (53) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த சண்முகராஜ் குடும்பத்துக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.