இந்நிலையில் சமத்துவபுரத்தில் வசித்து வரும் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள பொருளாதார வசதியின்றி அவதிப்பட்டு வருவதாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை சந்தித்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஏழை குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று உடனடியாக 6 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் நேற்று மாலை சமத்துவபுரத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.காந்தி தலா ரூ.50,000 வீதம், 6 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் சொந்த பணத்தை வழங்கினார்.
தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக உதவி செய்த அமைச்சருக்கு அக்குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் அமைச்சருடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனி, திமுக பேச்சாளர் முரசொலி மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.