சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய நியமிக்கப்பட்ட, தபால் வாக்கு செலுத்தாத வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி மையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தாத அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் 16 மையங்களுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.