மழையின் காரணமாக இபிஎஸ் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை தஞ்சை யில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது, டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும் 4ம் தேதி பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கு பதில் வருகிற 16ம் தேதி மாலை 5 மணியளவில், தஞ்சைபொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுவார்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து