இது தொடர்பாக ஏற்கனவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதேபோல், இந்த துறையில் கீழ் நிலை முதல் மேல் நிலை அதிகாரிகள் வரை ஒரு தமிழரும் இல்லை. எனவே தான் என்னுடைய கோரிக்கையாக அமலாக்கத்துறையில் 50 சதவீதம் தமிழர்கள் இருக்க வேண்டும், ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய நிலையில் அதற்கான முறையான விளக்கத்தை ஒன்றிய நிதியமைச்சரும் கொடுக்கவில்லை; சம்மந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளும் கொடுக்கவில்லை. இதற்கு பாஜ நிர்வாகிகள் தான் விளக்கம் கொடுக்கின்றனர்.
ஏற்கனவே, பாஜவின் அங்கமாக அமலாக்கத்துறை செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் நிர்மலா சீதாராமன் பதவி விலக கோரி அனுப்பி இருந்த கடிதத்திற்கு இதுவரை எந்தவித பதிலும் இல்லை. அதற்கான தீர்வு கிடைக்கவே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளேன். தற்போதைய சூழலில் அமலாக்கத்துறையை கை பொம்மையாக வைத்திருப்பது போல, அனைத்து ஒன்றிய துறைகளையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதற்கு யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு நான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.