ஒரு தலைவர் அந்த கட்சிக்கு அந்த பணியை சரிவர செய்யவில்லை என்றால், அந்த கடமையிலிருந்து அவர் தவறி இருக்கிறார் என்று அர்த்தம். சின்னம் ஒதுக்குவது என்பதற்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாட்டின் அடிப்படையிலே நாம் செயல்பட வேண்டும், அதை கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையம் இருக்கிறது. கட்சி தலைவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை என்றால், அதனை அவர்கள் புரிதலின் அடிப்படையில் சரியாக செய்யவில்லை என்பதுதான் அர்த்தம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கூட நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின்புதான் சைக்கிள் சின்னம் கிடைத்தது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.