இத்தாலி ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு எலினா-ஜெலினா தகுதி

ரோம்: ரோம் நகரில் நடந்து வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்- கஜகஸ்தானின் எலினா ரைபாகினா மோதினர். இதில் முதல் செட்டை 6-2 என ஸ்வியாடெக்கும், 2வது செட்டை 7-6 எலினாவும் கைப்பற்றினர். 3வது செட்டில் 2-2 என இருந்த நிலையில் ஸ்வியாடெக் காயத்தால் வெளியேறியதால் எலினா ரைபாகினா, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல் மற்றொரு கால் இறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசாவை 2-6, 6-4, 3-6 என லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் எலினா-ஜெலினா மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் அன்ஹெலினா கலினினா, ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா மோதுகின்றனர்.

Related posts

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது!