சந்திப்பின் போது தொகுதியில் உள்ள கள நிலவரம்-நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது-தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள்-பாக முகவர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் குழுவினர் கேட்டறிந்தனர். இந்தியாவை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிரூபிக்கிற வகையில் வட சென்னை-தென் சென்னை தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு குழுவினர் கேட்டுக் கொண்டனர்.தொடர்ந்து மாலையில் மத்திய சென்னை, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பின் போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தொண்டர்களை அதற்காக தயார்படுத்துவது-கள நிலவரம்-மக்களின் கோரிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து திமுக நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை குழுவினர் கேட்டறிந்தனர்.