இதனிடையே ஒப்புகைச் சீட்டு 100% எண்ணக்கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையீடு ஒன்றை முன்வைத்தார். ஒரு முறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டு பதிவாவது குறித்து பிரசாந்த் பூஷண் நீதிபதிகளிடம் முறையிட்டார். மேலும் ஒப்புகைச் சீட்டை வாக்காளர்கள் தங்களது கையில் எடுத்து பெட்டிக்குள் போம அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம், “இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டு பதிவாவதாக வெளியான புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுந்ததாக புகார் ஏதும் வரவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.