இதையொட்டி தொழிலதிபர் பெர்னி மொரேனோ என்பவரை ஆதரித்து டிரம்ப் நேற்றுமுன்தினம் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ பெர்னி மொரேனோ ஓஹியோ சமூகங்களை கட்டியெழுப்ப தனது வாழ்க்கை முழுவதையும் அவர் செலவிட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் வாஷிங்டனில் போர் வீரராக இருக்க போகிறார். சமூகமக்களின் பாதுகாப்பை வழங்குவது நான் தான் என்றும் ஜோ பைடன் அல்ல. எனவே, நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் நாட்டில் ரத்தகளரி ஏற்படும்.
வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்’’ என்றார். டிரம்ப்பின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து ஜோ பைடனின் பிரசார செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் சிங்கர் கூறுகையில்,‘‘அச்சுறுத்தல்கள் மூலம் அரசியல் வன்முறையை இரட்டிப்பாக்குகிறார் டிரம்ப். ஆனால், டிரம்பின் தீவிரவாத போக்கை நிராகரித்துள்ள மக்கள் அவருக்கு மேலும் ஒரு தோல்வியை கொடுக்க போகிறார்கள் என தெரிவித்துள்ளார்.