கல்வியில் நல்ல உயர்நிலை பெறவும் உழைத்த உழைப்பு வீணாகாமல் இருக்கவும் ஞாபகசக்தி வேண்டும். இதனை அருளுபவர் லஷ்மி ஹயக்ரீவர். இந்த நிலைபெற்ற ஐஸ்வர்யமான கல்விச் செல்வத்தைப் பெற செட்டிப்புண்ணியத்தில் உள்ள லஷ்மி ஹயக்ரீவரை வழிபடலாம்.
அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கே ஞானத்தை அருளியவர். சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோயில் கூத்தனூரில் உள்ளது.
கல்விச் செல்வத்தோடு சேர்த்துப் பொருள் செல்வத்தையும் வழங்கும் விதமாகத் தனது மடியில் லட்சுமி தேவியுடன் அருள்பாலிக்கும் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட யோக தெய்வம் ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இதில் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உலகப் புகழ் பெற்றது.
சென்னைக்கு அருகில் காட்டாங் கொளத்தூரை அடுத்துள்ள செட்டிப் புண்ணயத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில்உள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவர் சன்னதியில் அர்ச்சித்து பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என இத்திருக்கோயில் தலபுராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார். ஆண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கும் மாணவ, மாணவிகள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள்.
கல்வியில் நல்ல உயர்நிலை பெறவும் உழைத்த உழைப்பு வீணாகாமல் இருக்கவும் ஞாபகசக்தி வேண்டும். இதனை அருளுபவர் லஷ்மி ஹயக்ரீவர். இந்த நிலைபெற்ற ஐஸ்வர்யமான கல்விச் செல்வத்தைப் பெற செட்டிப்புண்ணியத்தில் உள்ள லஷ்மி ஹயக்ரீவரை வழிபடலாம்.
அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கே ஞானத்தை அருளியவர். சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோயில் கூத்தனூரில் உள்ளது.
கல்விச் செல்வத்தோடு சேர்த்துப் பொருள் செல்வத்தையும் வழங்கும் விதமாகத் தனது மடியில் லட்சுமி தேவியுடன் அருள்பாலிக்கும் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட யோக தெய்வம் ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இதில் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உலகப் புகழ் பெற்றது.
சென்னைக்கு அருகில் காட்டாங் கொளத்தூரை அடுத்துள்ள செட்டிப் புண்ணயத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில்உள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவர் சன்னதியில் அர்ச்சித்து பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என இத்திருக்கோயில் தலபுராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார். ஆண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கும் மாணவ, மாணவிகள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள்.