ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் செய்தியர்களிடம் பேட்டி அளித்தார். அந்தப்பேட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை தொண்டர்கள் உரிமையை தாக்கும் போராட்டம், யுத்தம் தொடரும். பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் பழனிச்சாமி.
ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் ஒரே ஒருவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசபடவில்லை. பிரதமரை சந்தித்தபோது வாழ்த்து கடிதம் மட்டுமே அளிக்க கூறினார் நேற்று திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்தார். வாய்ப்பு வந்தால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்.
எடப்பாடி தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும்போது வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதிமுகவை மிக போராட்டம் தொடரும். சசிகலா விரும்பினால் நிச்சயம் அவரை சந்திப்பேன். டிடிவி தினகரனுடன் இணைந்தது நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.