எடப்பாடி தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும்போது வெளியிடுவேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். திருச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், இன்று ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஒபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட செலாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் 5 சவரன் தங்கச் செயின் பரிசாக வழங்கப்படும் என்று ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் செய்தியர்களிடம் பேட்டி அளித்தார். அந்தப்பேட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை தொண்டர்கள் உரிமையை தாக்கும் போராட்டம், யுத்தம் தொடரும். பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் பழனிச்சாமி.

ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் ஒரே ஒருவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசபடவில்லை. பிரதமரை சந்தித்தபோது வாழ்த்து கடிதம் மட்டுமே அளிக்க கூறினார் நேற்று திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்தார். வாய்ப்பு வந்தால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்.

எடப்பாடி தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும்போது வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதிமுகவை மிக போராட்டம் தொடரும். சசிகலா விரும்பினால் நிச்சயம் அவரை சந்திப்பேன். டிடிவி தினகரனுடன் இணைந்தது நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

குவைத் தீ விபத்து தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

முல்லைப் பெரியாறு அணையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு..!!

குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி!!