திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்துவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டிற்கே வழிகாட்டும் நம் திராவிட மாடல் அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000-விடியல் பேருந்து பயணம்-மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம்-முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம்-மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம்-நான் முதல்வன்-விவசாயிகளுக்கென தனி வேளாண் நிதி நிலை அறிக்கை-விளையாட்டுத்துறையில் புதுப்பாய்ச்சல். ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொழில்துறை திட்டங்கள்-கலைஞர் நூற்றாண்டு நூலகம்-கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை-கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகளை செய்து வெற்றி நடைபோடுகிறது நம் தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும்-ஒவ்வொரு மனிதரும் பயன்பெற வேண்டுமென்ற உயரிய லட்சியத்தோடு செயல்பட்டு வரும் நம் திமுக அரசின் சாதனைகளை போற்றுவோம். நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தி, வரவிருக்கிற நாட்களில் இன்னும் அயராது உழைப்போம். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

Related posts

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அமித்ஷா நாளை மதுரை வருகை

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்